districts

img

பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள நவீன கழிப்பிடங்கள்

பொள்ளாச்சி, ஜன.25- போடிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுக்காலனியில்  கட்டப்பட்ட நவீன கழிப்பிடங்கள் போதிய வசதியின்றி,  பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக  புகார் எழுந்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த போடி பாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுக் காலனியில் 200க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் அவர்களின் சுகாதார பயன்பாட்டிற்காக ஊராட்சி ஒன்றியத்தின் மூலமாக நிதி  ஒதுக்கப்பட்டு பொதுகழிப்பிடம் கட்டப்பட்டது. இதன்பின் னர் தண்ணீர் பிரச்சனையை காரணமாக சொல்லி ஊராட்சி நிர்வாகத்தால் கட்டிட பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இத னால், இக்கட்டிடம் பயன்பாடின்றி விஷ பூச்சிகளும், முட் புதர்களும் சூழ்ந்துள்ளது. இதனால் இக்கழிப்பிடத்தை அப் பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை உருவாகி யுள்ளது. இதன்காரணமாக திறந்தவெளி பகுதிகளில் இயற்கை உபாதைகளுக்கு செல்லும் அவல நிலை தற் போது வரை தொடர்ந்து வருகிறது.   இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்னர் போடிபாளை யம் பேருந்து நிறுத்தம் முன்பு கட்டப்பட்ட பொது கழிப்பிட மும், பராமரிப்பின்றி தான் காட்சியளிக்கிறது. எனவே, உடன டியாக மேற்கண்ட நவீன கழிப்பிடங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.