நாமக்கல், ஆக.4- ரூ.89.29 கோடியில் நவீன தானி யங்கி பால் பண்ணை அமைக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு சாலை, ஹோட்டல் கோஸ்டல் ரெசிடென்சியில் சனியன்று, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவர் கே. ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., தலை மையில் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத் தியாளர்கள் ஒன்றியத்தின் 3 ஆவது பொதுப்பேரவை கூட்டம் நடைபெற் றது. அப்போது அவர் பேசுகையில், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற் பத்தியாளர்கள் ஒன்றியம், மாநில அள வில் தரமான பால் கொள்முதல் செய்வ தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள் ளது என்பது பெருமைக்குரிய ஒன்றா கும். பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்ட ருக்கு ரூ.3 ஊக்கத்தொகை கூடுத லாக வழங்க தமிழ்நாடு முதல்வர் உத்தர விட்டதன் அடிப்படையில், நாமக்கல் பால் கூட்டுறவு ஒன்றியத்திற்கு 30 ஆயி ரம் லிட்டர் பால் கூடுதலாக கிடைக்கப் பெறுகிறது. கூட்டுறவு சங்கப்பணியா ளர்கள் தான் கூட்டுறவு அமைப்பின் இதயம் போன்றவர்கள், என்றார். இதைத்தொடர்ந்து, நாமக்கல் பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கான பொது துணைவிதியை திருத்தம் செய் திடல், தணிக்கை அறிக்கை வாசித்து அங்கீகரிக்க ஒப்புதல், லாப பிரி வினை அடிப்படையில் உறுப்பினர் சங் கங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி யதை அங்கீகரித்தல், வரவு செலவு பட்டி யல் அங்கீகரித்தல், நாமக்கல் கால் நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திடமிருந்து 13 ஏக் கர் நிலப்பரப்பு உள்ள நிலத்தை 75 வரு டத்திற்கு நீண்டகால குத்தகை அடிப்ப டையில் என்.எம்.ஆர் 180 நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கள் ஒன்றியத்திற்கு நவீன தானியங்கி பால் பண்ணை அமைக்கப்பதற்காக பெற்று கொண்டது, ரூ.89.29 கோடியில் நவீன தானியங்கி பால் பண்ணை அமைத்தல் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரும், நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியா ளர்கள் ஒன்றியச் செயலாட்சியருமான ச.உமா, ஆவின் பொது மேலாளர் ரா. சண்முகம், துணைப்பதிவாளர் (பால்வ ளம்) ஐ.சண்முகநதி, பால் உற்பத்தியா ளர்கள் நலச்சங்க பொதுச்செயலா ளர் ம.க.ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.