districts

img

தனியார் துறையின் வேலை வாய்ப்பு முகாம்

கோவை, ஆக.5- கலைஞர் நூற்றாண்டு விழாவினை யொட்டி, கோவையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது. இதில், வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கனேசன் ஆகியோர் பங்கேற்றனர்.  கோவை மாவட்டம், கவுண்டம்பா ளையம் பகுதியில் உள்ள தனியார் கல் லூரி வளாகத்தில் தமிழக அரசு சார்பில்  தனியார் துறையின் மாபெரும் வேலை  வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டு அமைச்சர் சி.வி.கணேசன், வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு, இளை ஞர்களுக்கு பணியாணைகளை வழங்கி னர். இதனைத்தொடர்ந்து செய்தியா ளர்களிடம் அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், இதுவரை 1.51 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்று தந் துள்ளோம்.

2 ஆவது வேலை வாய்ப்பு முகாம் இன்றைய தினம் (சனியன்று) கோவையில் நடைபெற்றது. டிசம்பர் மாதம் இறுதிக்குள் 100 வேலை வாய்ப்பு முகாம் நடத்தி முடிக்கப்படும். 100 ஆவது வேலை வாய்ப்பு முகாமில் முதலமைச்சர் பங்கேற்று பணிக்கான ஆணையை வழங்குவார். 72 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மேம் படுத்தப்பட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிறோம்.  இளைஞர்களிடையே வேலை இல்லை என்பதை போக்குவதே தமிழ் நாடு அரசின் நோக்கம். இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 7.5 லட் சம் பேர் கலந்து கொண்டுள்ளனர். இனி வரும் முகாமில் மாற்றுத்திறனாளிக ளுக்கு அதிகம் கவனம் செலுத்து வோம், என்றார்.  முன்னதாக இம்முகாமில், 393 நிறு வனங்கள் கலந்து கொண்டன. 3,365 ஆண் கள் மற்றும் 2,886 பெண்கள் என மொத் தம் 6,251 வேலை நாடுபவர்கள் கலந்து  கொண்டனர். 8 மாற்றுத்திறனாளிகள் உட் பட 894 நபர்கள் வேலைவாய்ப்பு பெற்ற னர். இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீர ராகவ ராவ், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆன்ந்தகுமார், தூய்மைப் பணியாளர் நலவாரிய மாநில துணைத் தலைவர் கனிமொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.