நாமக்கல், மார்ச் 5- ரூ.194 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டியில் தமிழகப் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வனத்துறை அமைச் சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆகியோர் தலைமையில், மாநிலங் களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ் ஆகியோர் முன்னிலையில், நாமக் கல் நகருக்கு ரூ.194 கோடி மதிப்பீட்டில், புறவழிச்சாலை திட்டத்தில் மூன்றாம் கட் டப்பணியான வேட்டம்பாடி முதல் திருச்சி சாலை வரை புதிய சாலை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்ற வுடன் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சாலை உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் நாமக்கல் புறவழிச்சாலை தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி கிராமத்தில் ஆரம்பித்து வள்ளிபுரம் கிரா மத்தில் முடிவடையும் வகையில் 22 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட உள்ள தாக தெரிவித்தார். இங்கே அமைக்கப்படும் சாலையால், வீசானம், வேட்டம்பாடி, முத்துக் காப்பட்டி, சிவியம்பாளையம், வசந்தபுரம் உள் ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 4 லட்சம் பொதுமக்கள் பயனடையவர்கள் என்ற கூறி னார்.