சேலம், ஜூலை 11- சேலத்தில் நடைபெற்ற “மக்க ளுடன் முதல்வர்” திட்ட துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல் வம் ஆகியோர் கலந்து கொண்ட னர். ஊரக பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று தரு மபுரியில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து, சேலம் மாவட் டம், காமலாபுரம், கிராம சேவை மையத்தில் வியாழனன்று “மக்களு டன் முதல்வர்” திட்ட முகாம் நடை பெற்றது. இதில் பெறப்பட்ட மனுக் கள் மீது உடனடி நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன் னீர்செல்வம் ஆகியோர் பயனாளிக ளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை யில் 10 நபர்களுக்கு விலையில்லா உதவி உபகரணங்களும், புதிய தனி நபர் குடிநீர் இணைப்பிற்கான உத்த ரவு ஆணைகள், கூட்டுறவுத் துறை யில் சுய உதவிக்குழு கடனுதவி கள் 6 நபர்களுக்கும் வழங்கப்பட் டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட் சியர் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயர் ஆ.ராமச்சந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சட்டமன்ற உறுப் பினர்கள் ரா.ராஜேந்திரன், ரா. அருள், சதாசிவம், துணை மேயர் மா.சாரதாதேவி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.