districts

img

தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தில் அமைச்சர் ஆய்வு

கோவை, ஜூன் 22- தமிழ்நாடு பஞ்சாலைக் கழக தறிக்கூடத்தில் வியாழ னன்று தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆய்வு மேற்கொண்டார்.  தமிழ்நாடு பஞ்சாலைக் கழகத்திற்கு சொந்தமாக 3 விசைத்தறி கூடங்களையும், ஒரு ஏர்ஜெட் தறி கூடத்தை யும் நடத்தி வருகிறது. இங்கு  இலவச சீருடைத் திட்டத்தின் கீழ் தேவையான  சீருடைத் துணிகள் மற்றும் வேட்டி, சேலை களை உற்பத்தி செய்து வழங்கி வருகின்றது.  மேலும் அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் தேவையான சீரு டைத்துணிகள், போர்வை, துண்டுகள் மற்றும்  இதர ரக துணிகளை உற்பத்தி செய்து வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கோவையில் பல்வேறு நிகழ்ச்சி களில் கலந்து கொள்கிறார். அதன் ஒரு நிகழ் வாக, குறிச்சி சிட்கோ தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக்கூடத்தை பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். ஆய்வின்போது, அங் குள்ள கருவிகளின் செயல்பாடுகள் குறித்து  கேட்டறிந்தார். மேலும், அங்கு வைக்கப்பட் டிருந்த நூல்களின் தரங்களையும் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் துறையின் முதன்மை செய லாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துறையின்  ஆணையர் வள்ளலார், மாநகராட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அவிநாசி சாலை யில் உள்ள தனியார் அரங்கில் துணி நூல்  துறையின் சார்பில் தொழில்நுட்ப ஆலோ சனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடை பெற்றது.