districts

img

மடத்துக்குளம் அரசு பள்ளியில் அமைச்சர் ஆய்வு

உடுமலை, ஆக. 9- கோவை அரசுக் கலைக்  கல்லூரியில் தமிழக முதல் வர் தமிழ்ப் புதல்வன்  திட் டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பின்னர் திருப்பூர் மாவட் டம் மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இதைதொடர்ந்து, தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார். இதையடுத்து, உடுமலைப்பேட்டை தாலுகா  குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு மாண வர்களிடம் தமிழ்ப் புதல்வன் திட்டம் குறித்து  விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.