districts

img

பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் திட்டங்கள் அரசின் திட்டங்கள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

ஈரோடு, பிப். 8- பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமி ழக அரசின் திட்டங்கள் அமைந்துள் ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.  ஈரோட்டில், மகளிர் சுய உதவிக்  குழுக்களுக்கு 100.34 கோடி ரூபாய்  வங்கிக் கடன் இணைப்புகளும், 6 மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள் என பல்வேறு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சோலார் பேருந்து நிலைய வளா கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட , இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின், 2ஆயிரத்து 337 குழுக்களைச் சேர்ந்த 20ஆயிரத்து 518 மகளிர் பயன்பெறும் வகையில், சுய உத விக் குழுக்களுக்கு 100.34 கோடி  ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு களும் மற்றும் 6 மதி எக்ஸ்பிரஸ் மின்  வாகனங்கள் மற்றும் நலத் திட்ட  உதவிகளை வழங்கினார். மேலும்,  ஈரோடு மாவட்டத்தில் நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை, வேளாண்மை  -உழவர் நலத்துறை, கால்நடை பரா மரிப்புத்துறை, பள்ளிக்கல்வித்துறை நெடுஞ்சாலைத்துறை, ஊரக  வளர்ச்சி மற்றும் ஊராட்சி நீர்வளத் துறை ஆகிய துறைகளின் சார்ப்பில் ரூ.129.92 கோடி மதிப்பீட்டில்  முடிவுற்ற 46 புதிய திட்டப்பணி களை திறந்து வைத்தார். அதேபோன்று, நகராட்சி நிர்வா கம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை,  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித்துறை, மக்கள் நல்வாழ்வு மற் றும் குடும்ப நலத்துறை மற்றும் கால் நடை பராமரிப்புத்துறை ஆகிய  துறைகளின் சார்பில் ரூ.6.16 கோடி  மதிப்பீட்டில் 32 புதிய திட்டப் பணிக ளுக்கு அடிக்கல் நாட்டினார்.  மேலும் பல்வேறு துறைகளின் 9948  பயனாளிகளுக்கு ரூ.70.56 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உத விகளை வழங்கினார். இந்நி கழ்வுக்கு, வீட்டுவசதி மற்றும் நகர் புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி முன்னிலை வகித்தார்.  இதைத்தொடர்ந்து விழாவில்  பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டா லின், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு  அமைந்த 2021ஆம் ஆண்டு முதல்  தற்போது வரை 12 லட்சத்து 25ஆயி ரத்து 83 சுய உதவிக் குழுக்களுக்கு 69ஆயிரத்து 554 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கியுள்ளது. தற்போது, தமிழ்நாடு முழுவதும் வழங்கவுள்ள 2ஆயிரத்து 504  கோடி ரூபாயும் சேர்த்து ரூ.72 ஆயி ரத்து 58 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கி சாதனைப் படைத்துள்ளது.

2023-2024 ஆம் நிதி யாண்டிற்கு வங்கி கடன் இணைப்பு  வழங்குவதற்கு 30ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தற்போது 25ஆயிரம் கோடி ரூ பாய் வழங்கப்பட்டுள்ளது. மீத முள்ள இலக்கையும் அடைந்திட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. மகளிருக்கு கட்ட ணமில்லா பேருந்து சலுகை என்ற  திட்டத்தின் மூலம் ஒரு பெண் ஒரு  மாதத்திற்கு ரூ.900/- வரை சேமிக்க  முடிகிறது. அதேபோல் பெண்க ளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூ பாய் வழங்கும் ”கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்” இன்று  குடும்பத் தலைவிகளான பெண்க ளுக்கிடையில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார். இவ்விழாவில், அரசு முதன் மைச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முனை வர் ப.செந்தில்குமார், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா, தமிழ்நாடு மகளிர் மேம் பாட்டு நிறுவன மேலாண்மை இயக் குநர் ச.திவ்யதர்சினி, மாநிலங்க ளவை உறுப்பினர் அந்தியூர்.ப. செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன், அந்தியூர்  சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்க டாச்சலம், மற்றும் அரசு அலுவலர் கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி கள் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.