districts

img

உடுமலை உழவர் சந்தையில் அமைச்சர் சாமிநாதன் ஆய்வு

திருப்பூர், ஜூலை 5 – உடுமலைபேட்டை உழவர் சந்தையில் செவ்வாய்க்கி ழமை அதிகாலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற் கொண்டார். இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த காய்கறிகளைப் பார்வையிட்டு விவசாயி கள் மற்றும் பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அத்துடன் உழவர் சந்தையில் உள்ள அடிப்படை வசதிகள்  குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இதன் பிறகு உழவர் சந்தை அலுவலகத்தை ஆய்வு  மேற்கொண்டு அங்கு வைக்கப்பட்டுள்ள காய்கறிகள் விலைப் பட்டியல் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு  ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது உடுமலை கோட்டாட் சியர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் உழவர் சந்தை அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.