districts

img

உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை நிர்ணயிப்பது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு: அமைச்சர் சு.முத்துசாமி

கோவை, செப்.5- உதயநிதி ஸ்டாலின் தலைக்கு  விலை நிர்ணயிப்பது, ஜனநாய கத்தில் தவறான அறிவிப்பு என  அமைச்சர் சு.முத்துச்சாமி தெரிவித் துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தொழில்  மையம் மூலம் சிறு, குறு மற்றும்  நடுத்தர தொழில் நிறுவனங் களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாயன்று நடை பெற்றது. இதில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்து கொண்டு கடன்  உதவிகளை வழங்கினார். இதில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சிறு, குறு  மற்றும் நடுத்தர தொழில் நிறுவன  கடன்களுக்காக 68 பயனாளி களுக்கு ரூ.37.52 கோடி உதவிகள் வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துச்சாமி பேசுகையில், நம்  மாவட்டத்திற்கு முதல்வர் வரும் போது, அனைத்து துறைகளும் தயாராக வேண்டும். தொழிற்துறை  மட்டுமின்றி அடிப்படையான  தேவைகளையும் நாம் முதல்வரி டத்தில் கடிதமாக கொடுத்திருக் கிறோம். வேலை என்று வரும் போது இந்த துறை மட்டும் தான்  நமக்கு என்றில்லாமல், நம் மாவட் டத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ, அதனை நாம்  செய்ய வேண்டும், என்றார். இதன்பின் அவர் செய்தியாளர் களிடம் பேசுகையில், நலத்திட்டங் கள், வளர்ச்சி பணிகள் செய்வதை அதிகாரிகள் கவனம் எடுத்து செய்து வருகின்றனர். கோவை மாநகரில் உள்ள பிரச்சனை தீர்க்க  வேகமாக நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. பல பணிகள் தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பீக் ஹவர் மின் கட்டணம் தொடர்பாக துறை சம்பந் தப்பட்ட அமைச்சரிடம் பேசி சுமூக முடிவு எடுக்கப்படும். டாஸ்மாக் கடை தொடர்பாக சீர்திருத்தங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதற் காக ஒரு மாத கால அவகாசம்  கேட்டுள்ளோம். டாஸ்மாக் தொடர் பாக தவறாக கருத்துகள் மக்க ளிடம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரு மாத காலத்தில் டாஸ்மாக் தொடர்பான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பாஜக சொல்வதை நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தால், மக்கள்  பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு செயல்பட முடியாது. உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10  கோடி ரூபாய் விலை அறிவிக்கப் பட்டு இருப்பது ஜனநாயகத்தில் தவறான அறிவிப்பு. பாஜகவினரின்  நடவடிக்கையை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களே முடிவெடுப்பார்கள் என்றார்.  முன்னதாக, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் ஆளுயர சிலையை அமைச்சர்  திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து வஉசியின் 152 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ள  வ.உ.சிதம்பரனார் இழுத்த செக் கிற்கும், அவரது திருவுருவப்படத் திற்கு அமைச்சர் சு.முத்துச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தி னார்.  இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த குமார் உட்பட பலர் கலந்து கொண் டனர்.