ஈரோடு, அக்.2- ஈரோடு ஆவின் நிறுவனத்தில் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்ட பால் வளத்துறை அமைச்சர் நாசர், இரண்டு அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். ஈரோடு மாவட்டம், சென்னிமலை சாலை யில் உள்ள நவீன கால்நடை தீவன தொழிற் சாலையில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறுகையில், ஈரோடு ஒன்றிய கால்நடை தீவன தொழிற்சாலை நாளொன்றுக்கு 100 மெ.டன் தீவன உற்பத்தி திறன் கொண்டதாக 1980 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இத் தீவன தொழிற்சாலை வளாகத்திலேயே நாளொன்றுக்கு 150 மெ.டன் தீவன உற்பத்தி திறன் கொண்டதாக ஒரு புதிய தானியங்கி தீவன ஆலை ரூ.1914.55 லட்சம் செலவில் நிர்மானம் செய்யப்பட்டு, 2017 ஆம் ஆண்டில் முதல் தீவன உற்பத்தியை தொடங்கியது. இந்த தீவன அலையின் உற்பத்தி திறனை மேலும் அதிகரிக்கும் பொருட்டு கூடுதல் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, தினசரி உற்பத்தி அளவினை நாளொன்றுக்கு 300 மெ.டன் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற் போது நாளொன்றுக்கு 300 மெ.டன் உற் பத்திக்கான விரிவாக்கப் பணிகள் முடிவ டைந்து உற்பத்தி செய்வதற்கு தயார் நிலை யில் உள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையை முன் னிட்டு, ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப் படும் இனிப்பு வகைகள், பேக்கிங், பயன் படுத்தப்படும் சர்க்கரை, மாவு உள்ளிட்டவை குறித்து திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆவின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள், பால் விநியோகம், பாலின் அளவு மற்றும் தரம் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.85 கோடி எய்தப் பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் மக்க ளுக்கு தரமான இனிப்பு வகைகளை வழங்கி டும் நோக்கில் பணிகள் நடைபெற்று வரு கிறது, என்றார்.
பணியிடை நீக்கம்
முன்னதாக, சித்தோட்டில் உள்ள ஈரோடு மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தயாரிப்பு பொருட்கள், பால் விநியோகம், பாலின் அளவு மற்றும் தரம் ஆகியவை குறித்து திடீர் ஆய்வு மேற்கொண் டார். இந்த ஆய்வின்போது, பால் பாக்கெட்டு கள் தயாரிக்கும் பிரிவில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காத செயல் பணியாளர் (பொறியியல்) எம்.ரவிச்சந்திரன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். அதேபோல், ஆவின் ஜங்சனில் சரக்கிருப்பு பதிவேடு களை ஆய்வு செய்தார். அப்போது ரூ.21 ஆயி ரம் வித்தியாசம் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு பொறுப்பான ஒன்றிய விற்பனை பி்ரிவின் துணை மேலாளர் (அலுவலகம்) ஏ.சையத் முஸ்தபா தற்காலிக பணியிடை நீக்கம் செய் யப்பட்டார். இவர்கள் இருவரும் தலைமை யகத்திலிருந்து வெளியில் செல்லக்கூடாது என்றும், பணிநீக்க காலத்தில் பிழைப்பூதி யம் பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள் ளது.