ஈரோடு, செப். 12- பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிகளில் புதனன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டம், பனையம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். எவ்வித முன்னறி விப்புமின்றி திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். அப்போது, பள்ளியில் செயல்படும் சத்துணவு கூடத்தை பார்வையிட்டார். சத்துணவு பணியாளர்கள் இடப்பற் றாக்குறையைத் தெரிவித்தனர். அதுகு றித்து உடனடி நடவடிக்கை மேற் கொள்ள தொடர்புடைய துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார். பெற் றோர் ஆசிரியர் கழகத்தின் நிதி உதவி யுடன் வாங்கப்பட்டுள்ள மாணவர்க ளுக்கான தொடுதிரை பலகை மற்றும் திறன்மிகு வகுப்பறைகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார். அத்து டன் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு ஆகியவை குறித்தும் மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடி னார்.