districts

img

நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

ஈரோடு, செப்.29- திம்பம் மலைப்பாதையில் தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.  சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதை தமிழகம்-கர்நாடகத்தை இணைக்கும் முக்கிய பாதையாகும். வன விலங்குகள் வாகனத்தில் அடிபட்டு உயிரி ழக்கும் சம்பவங்களை தடுக்க கடந்த  பிப்ரவரி 10ஆம் தேதி முதல் திம்பம் மலைப் பாதையில் இரவு நேர வாகன போக்கு வரத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் அதிக பாரம் ஏற்றும் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டது.  இந்நிலையில், திம்பம் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது. இதையடுத்து தமிழக நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலை துறை தலைமை பொறி யாளர் ஆகியோர் திம்பம் மலைப்பாதையில் புதனன்று ஆய்வு செய்தனர்.  அப்போது அமைச்சர் எ.வ.வேலு செய்தி யாளர்களிடம், ‘திம்பம் மலைப்பாதையில் அடிக்கடி விபத்து நிகழும் 2, 6, 8, 9, 26ஆவது  கொண்டை ஊசி வளைவுகளில் விபத்து  நடைபெறாமல் இருக்க சாலை விரிவாக்கம்  மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து  ஆய்வு செய்தோம், என்றார்.