districts

img

கோவையில் திமுக-வின் முப்பெரும் விழா அமைச்சர் முத்துசாமி ஆய்வு

கோவை, ஜூன் 9- திமுக-வின் முப்பெரும் விழா நடைபெற உள்ள கோவை,  செட்டிபாளையம் எல்என்டி புறவழிச்சாலை பகுதியில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு செய்தார். கோவை மாவட்டம், செட்டிப்பாளையம் எல்அன்டி புறவ ழிச்சாலை பகுதியில், திமுகவின் முப்பெரும் விழா ஜூன்  14 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அதற்கான இடத்தை  வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆய்வு செய் தார். இதன்பின் அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்த லில் பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில், முப்பெரும்  விழா நடத்த முதல்வர் அனுமதி அளித்துள்ளார். தேர்த லில் மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாடு மக்கள் அளித்துள் ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்  இந்த விழா நடந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்  தவிர, கட்சி சார்பில் வெற்றி பெற திட்டம் வகுத்து வழி  நடத்திய கழக தோழர்களுக்காகவும் விழா நடத்தப்படு கிறது. இந்த முப்பெரும் விழாவை கோவையில் நடத்த கேட்டுக்கொண்டதன்பேரில், ஜூன் 14 ஆம் தேதியன்று  நடைபெற உள்ளது. இவ்விழாவில், புதிதாக தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ள காநாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும், தோழமை கட்சி தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளனர். தேசிய கட்சிகளின் தலைவர்கள் வருகை குறித்து இது வரை தகவல் இல்லை, என்றார். இந்த ஆய்வின்போது, திமுக மாவட்டச் செயலாளர்கள் நா.கார்த்திக், தளபதி.முருகேசன், தொ.அ.ரவி, சட்டத்துறை இணைச் செயலாளர் கே.எம்.தண்டபாணி, தகவல் தொழில் நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, தலைமை  செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், தொமுச நிர்வாகி தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.