ஈரோடு, பிப். 28- காளிங்கராயன் அணையில் உபரி நீர் 400 கன அடியை எட்டும் போது தமிழ்நாடு முதல்வரால் அவிநாசி, அத்திக்கடவு திட்டம் தொடங்கி வைக் கப்படும் என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் அத்திக்கடவு, அவி நாசி திட்டப்பணிகள் தொடர்பாக விவ சாயிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுக்கான கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேச மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், அத்திக்கடவு அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து ஆண்டொன்றிக்கு 1.50 டிஎம்சி உபரி நீரை நீரேற்று முறை யில் நிலத்தடியில் குழாய் பதிப்பின் மூலம் கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பயனடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் இத்திட்டம் மூலம் பயன்பெறும். 32 நீர்வளத்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம் குட்டைகள் (மொத்தம் 1045 எண்கள்) நீர் நிரப்பப்படும். மேலும் நிலத்தடி குழாய் அமைக் கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. திட்டப் பணிகள் 99 சதவீதம் முடிவுற்று, 1045 குளம் குட்டைகளுக்கு தண்ணீர் கொண்டு சென்று சோதனையோட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இது வரை ரூபாய். 1747.44 கோடி அள வில் செலவினம் மேற்கொள்ளப்பட் டுள்ளது. தற்போது பவானி ஆற்றில் உபரி நீர் வரத்து 218 கன அடியாக உள்ளது. இத்திட்டமானது 250 கன அடி நீரினை கொண்டு 1045 குளங்க ளுக்கும் ஒரே நேரத்தில் நீர் வழங்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பவானி ஆற்றில் உபரி நீர் 400 கன அடிக்கு மேல் கிடைக்க பெறும் பொழுது அனைத்து நீரேற்று பம்புகள் இயக்க இயலும். தற்பொழுது 160 கன அடி நீர் வரத்து உள்ளது. எனவே, உபரி நீர் 400 கன அடிக்கு மேல் கிடைக்கப் பெறும் பொழுது தமிழ்நாடு முதல மைச்சரால் இத்திட்டம் தொடங்கி வைக்கப்படும் என்றார்.