திருப்பூர், ஜூலை 1- பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட பகுதிகளில் ரூ.16.81 கோடி மதிப்பீட்டில் புதிய திட்ட பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சனி யன்று துவக்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில், பல்லடம் மற்றும் பொங் கலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.16.81 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகள், ரூ.37.78 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகள், பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், கள் ளிப்பாளையத்தில் கலைஞரின் வரு முன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத் துவ முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் துவக்கிவைத்தார். மேலும், வட மலைபாளையம் மற்றும் அய்யம்பா ளையம் பகுதிக்குட்பட்ட 84 பயனாளி களுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா மற்றும் அறிவெளி நகர் பகுதிற் குட்பட்ட 50 நபர்களுக்கு ஜாதி சான்று களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் சார் ஆட் சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ.லட்சுமணன், இணை இயக்குநர் (வேளாண்மை) மா. மாரியப்பன், துணை இயக்குநர் (சுகாதா ரப்பணிகள்) ஜெகதீஸ்குமார், தமிழ் நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழ கம் செயற்பொறியாளர் பழனிசாமி, பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலு வலர் விஜயகுமார், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரன், உதவி பொறியாளர்கள் குருபிரசாந்த், செந் தில்வடிவேல், கார்த்திகேயன், மகா லட்சுமி மற்றும் உள்ளாட்சி அமைப்பு களின் பிரதிநிதிகள், அரசுதுறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்ட னர்.