ஈரோடு, ஜுலை 29- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் மற்றும் சென்னிமலை பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். இதில், காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10 கிராம ஊராட்சிகள் மற்றும் சென்னிமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் பொது மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவ டிக்கைகள் தொடர்பாக துறை அலுவலர்களுடனான ஆய்வு நடைபெற்றது. மேலும், அடிப்படைத் தேவைகளான குடிநீர் விநியோகம், வடிகால் வசதி, தடையில்லா மும்முனை மின்சார வசதி, மாணவ-மாணவியர்களுக்கு அரசு கலைக்கல்லூரி, இலவச வீட்டுமனைப் பட்டா, தெருவிளக்கு வசதி, சாலை வசதி, நியாயவிலைக்கடை, சமுதாயக்கூடம், பொதுக் கோரிக் கைகள், மயான வசதி உள்ளிட்ட பணிகள் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் தொடர்பான அறிவிப்புகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்திரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) என்.பொன் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.