உதகை, ஆக.9- இயற்கையை பாதுகாத்து, அதனை அடுத்த சந்ததியினருக்கு பழங்குடியினர் கொண்டு சேர்க்கின்றனர் என, உதகையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார். உலக பூர்வகுடிகளின் சர்வதேச தின விழா நீலகிரி மாவட்டம், உதகையிலுள்ள பழங்குடி யினர் பண்பாட்டு மையத்தில் புதனன்று நடை பெற்றது. ஆதிவாசிகள் நலச்சங்க செயலா ளர் ஆல்வாஸ் வரவேற்றார். மாவட்ட ஆட்சி யர் சா.ப.அம்ரித் முன்னிலை வகித்தார். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை வகித்து, பழங்குடியின பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப் போது அவர் பேசுகையில், பழங்குடியினர் வளர்ச்சி முக்கியமானது. தமிழ்நாட்டில் 37 வகையான பழங்குடியினர் உள்ளனர். இயற் கையை பாதுகாத்து, பழங்குடியினர் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கின்றனர். 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 8 லட்சம் பழங்குடியினர் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் 6 வகையான பழங்குடியினர் உள்ளனர். பழங்குடியினரின் தேவைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு பழங்குடியின ஆணையத்தின் மூலம் உதவி கிடைக்கிறது. பழங்குடியினரின் எதிர்காலமான இளை ஞர்களின் வளர்ச்சி தான் மிகவும் முக்கியம் ஆகும். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் காக இளைஞர்கள் தனித்திறன்களை வளர்த் துக்கொள்ள வேண்டும். பழங்குடியினர் நலத் துறை மூலம் 320 உண்டு உறைவிடப்பள்ளி கள், 48 விடுதிகள் செயல்படுகின்றன. இதில், 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஏக லைவா பள்ளிகளில் 2,600 மாணவர்கள் படிக் கின்றனர். இடைநிற்றலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. வகுப்பறை, ஆய்வகம், கழிப்பிட வசதிகள் மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கப் பட்டு உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்காக 4 புதிய விடுதிகள் கட்டப்படுகின்றன. ஆதிதிரா விடர் நலப்பள்ளி மாணவர்களுக்கு 12 ஆம் வகுப்பு வரை 4 செட் சீருடை வழங்கப்படு கிறது. 10 வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு கையேடுகள் வழங்கப்படுகின் றன. இணைய வழி நூலகங்கள், ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் மாணவர்கள் பாதுகாப்புக் காக விடுதிகளில் கண்காணிப்பு கேமராக் கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், தாட்கோ மூலம் மாணவர்க ளுக்கு கல்வி கடன் வழங்கப்படுகிறது. பழங் குடியினர்கள் தங்கள் உரிமையை பெற படிப்பு அவசியம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக ரூ.539 கோடி மதிப்பில் 14,620 வீடுகள் கட்டப்படுகின்றன. இதில், 7 ஆயிரம் வீடுகளின் கட்டுமானப் பணி நிறைவடைந்துள்ளது. வன உரிமை சட்டத்தின் கீழ், 20 ஆயிரத்து 811 தனி நபர் உரிமைகளும், 1014 சமுதாய உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், சாதிச்சான்று பிரச்சனைகள் களையவும், உண்மை தன்மை சரி பார்க்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3000 விண்ணபங்கள் பெற்றப் பட்டு, 1190 விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட் டுள்ளன, என்றார். முன்னதாக, அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ் தோடர் இன மக்கள் வசிக்கும் முத்துநாடு மந்து பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்றார். அப்போது அங்குள்ள பழங்குடியின மக் களை நேரில் சந்தித்து, கலந்துரையாடினார். மேலும், பழங்குடியின மக்களின் பாரம்பரிய உடையுடன் அமைச்சர் கயல்விழி செல்வ ராஜ், தோடர் இன பெண்களுடன் நடனமாடி னார். இதைத்தொடர்ந்து இவர் உதகை பழங் குடியின கல்லூரி மாணவிகள் விடுதியை ஆய்வு செய்தார். மேலும், ஊட்டியில் புதிய கல்லூரி விடுதி அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார்.