புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வறிக்கை
மாநிலத்தின் புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு அறிக்கை வரும் ஜனவரி மாதம் முதல்வரிடம் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்துள்ளது. இப்போது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. இம்மாத இறுதிக்குள் இப்பணிகள் முடிவடையும், ஜனவரி மாதத்தில் முதல்வரிடம் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் முதல்வர் அறிக்கையை ஆய்வு செய்து ஆணை வெளியிடுவார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் 24 வகையான விளையாட்டுகளில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. புதிதாக பொறுப்பேற்றுள்ள விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம் படுத்த நடவடிக்கை எடுப்போம், என்றார்.
ஈரோடு, டிச.16- பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் எழுத்தறிவு திட்டத்தினை செயல்படுத்த தன்னார்வ ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் ஈரோட்டில் தொடங்கப்பட் டது. இதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். புதிய எழுத்தறிவுத் திட்டம் 2022-2027 செயல்படுத்த திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் தன்னார்வல ஆசிரி யர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத் தார். இதில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், ஐந்தாண்டுத் திட்டமான இத்திட்டத்தின் முதற்கட்டமாக நடப்பு நிதியாண்டில், அனைத்து மாவட்டங் களிலும், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதப்படிக்கத் தெரியாத சுமார் 5 லட்சம் கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற் றும் எண்ணறிவுக் கல்வியை வழங்கிடும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திற்கு 23 ஆயிரத்து 598 பேர் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநிலளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர் களைக்கொண்டு அனைத்து மாவட்டங்களி லும் வட்டார அளவில் பயிற்சி வழங்கும் கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்கும் செயல் பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என் றார். முன்னதாக, மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுகளை வழங்கப்பட்டது. இதில், மாநகரட்சி மேயர் சு.நாகரத்தினம், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஜி.வெங்கடாச்சலம் (அந்தி யூர்), சி.கே.சரஸ்வதி (மொடக்குறிச்சி), மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, பள்ளி சாரா மற்றும் வயது வந் தோர் கல்வி இயக்க இயக்குநர் முனைவர்.பெ.குப்புசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவாக மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் பெ.அய்யண்ணன் நன்றி கூறினார்.