districts

img

“இல்லம் தேடி கல்வி” திட்டத்தின் கீழ் 35 லட்சம் மாணவர்கள் பயன்

சேலம், மார்ச் 19- “இல்லம் தேடி கல்வி” திட்டத்தின் கீழ் 35 லட்சம் மாணவர்கள் பயனடைந் துள்ளனர் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளனர். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார் பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகளை அமைச் சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக் கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங் கள் கொண்ட மண்டல அளவிலான கல்வித்துறை அதிகாரிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது. இதில்,  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என் னென்ன தேவை என்ற விவரங்களை தெரிந்து கொண்டு, அதற்கேற்ப நிதி  ஒதுக்கீடு செய்து, 5 ஆண்டுகளில் படிப்படியாக அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். மாநிலம் முழுவதும் ஆசிரியர் காலிப்பணியிடங் களை, பணி நிரவல் மூலம் நிரப்புவது போன்ற பணிகள் அடுத்த ஒரு மாதத் தில் மேற்கொள்ளப்படும். முழுமை யான ஆய்வுக்கு பின் எவ்வளவு ஆசிரி யர்கள் தேவைப்படுவார்கள் என்பது தெரியவரும்.  தமிழகத்தில் கடந்த 2013 ஆம் ஆண் டில் இருந்து ஆசிரியர் தகுதி தேர்வில்  (டெட்) தேர்ச்சி பெற்ற 80 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். கட்டாய கல்வி சட்டத்தின்படி, ஆண்டுக்கு 2  முறை டெட் தேர்வு நடத்த  வேண்டியுள்ளது. ஆசிரியர்களை புதி தாக நியமிப்பது குறித்து பல்வேறு கேள்விகள் இருக்கிறது. அதை எப்படி சரி செய்வது என்பது தொடர்பாக முதல் வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக் கப்படும்.  மேலும், இல்லம் தேடி கல்வித்திட் டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள் ளது. இத்திட்டத்தின் கீழ் தன்னார்வலர் களாக 1.78 லட்சம் பேர் தான் தேவைப் படுகின்றனர். ஆனால், தற்போது 6.6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இத் திட்டத்தின் கீழ் 35 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். பகுதி நேர ஆசிரி யர்களை பணி நிரந்தரம் செய்வோம் என தேர்தல் அறிக்கையில் கூறியதை, முதல்வர் படிப்படியாக நிறைவேற்று வார். தனியார் பள்ளிகளில 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 12 ஆம் வகுப்பு பாடங்களை நடத்தக்கூடாது. இதற்காகவே 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த விதி முறைகளை மீறும் பள்ளிகள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முன்னதாக, இப்பேட்டியின் போது  சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதி வேந்தன், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட ஆட்சி யர் செ.கார்மேகம், சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்தி பன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந் திரன் ஆகியோர் உடனிருந்தனர்.