தருமபுரி, அக்.21- பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தினர் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்றனர். தமிழ்நாடு பால் உற்பத்தியா ளர்கள் நல சங்கத்தினர் காரி மங்கலம், பெரியாம்பட்டி கூட் டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம் முன்பு கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாது தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் சோ.அருச்சுணன், மாவட்ட துணைத்தலைவர் ஆ.ஜீவா னந்தம், பால் உற்பத்தியாளர் நல சங்க மாவட்ட தலைவர் கே. அன்பு உள்ளிட்டோர் உரையாற்றி னார். பாப்பிரெட்டிபட்டி வட்டத்திற் குட்பட்ட பூதநத்தம் ஊராட்சி, குண் டல்மடுவு கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மனோகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.தீர்த்தகிரி, விவசாயிகள் சங்க மாவட்ட பொரு ளாளர் சி.வஞ்சி உள்ளிட்டோர் உரையாற்றினர்.
நாமக்கல்
இதேபோன்று 14 அம்ச கோரிக் கைகளை நிறைவேற்ற வலியு றுத்தி, திருச்செங்கோடு ஒன் றியம், பால்மடையில் உள்ள பால் கூட்டுறவு சங்க முன்பு பால் உற்பத்தி யாளர்கள் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வி.ஏ. நல்லியப்பன், என். கந்தசாமி ஆகி யோர் தலைமை வகித்தனர். இதில், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாநில துணைத்தலைவர் சங்கர், மாநில உதவிச் செயலாளர் மணி ஆகியோர் சிறப்புரையாற் றினர்.
சேலம்
சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், முத்தநாயக்கன்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங் கத்தின் முன்பாக பால் உற்பத்தி யாளர்கள் நல சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாவட்ட செயலாளர் பி.அரியாக் கவுண்டர், ஓமலூர் சிபிஎம் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன், விவ சாய சங்க மாவட்ட செயலாளர் ஏ. ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.