ஈரோடு, ஜூன் 20- பணி நேரம் அதிகரிக்கும் இயக்கு நரின் ஆணையை ரத்து செய்யக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தி ரேடியோலாஜிகல் அசிஸ் டெண்ட்ஸ் அசோசியேஷன் அமைப்பி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி நேரம் அதிகரிக்கும் இயக்குந ரின் ஆணையை ரத்து செய்து, பழைய முறையையே கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நுண்கதிர் ஊழியர்கள் சங்க மாவட் டச் செயலாளர் விஜயகுமார் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச் செயலாளர் மு.சீனிவா சன், மாவட்டச் செயலாளர் ச.விஜயமனோ கரன், எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு சங்க மாநிலத் தலைவர் ஜி.சசிகலா, தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரி மருத் துவமனை ஆய்வக நுட்பனர் சங்க மாவட்டச் செயலாளர் எட்வின் பிரசாத், தமிழ்நாடு ஒருங்கிணைந்த இந்திய முறை மருத்துமனை பணியாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சந்திர மெளலி உள்ளிட்டோர் உரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நலப் பணிகள் இணை இயக்குநரிடம் நிர்வாகி கள் மனு அளித்தனர்.