ஈரோடு, ஜூலை 8- கிராம ஊராட்சிகளை ஈரோடு மாநக ராட்சியுடன் இணைக்கும் ஆலோச னைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகா செய லாளர் என்.பாலசுப்ரமணி மாவட்ட ஆட் சியரிடம் கொடுத்த மனுவில் கூறியி ருப்பதாவது, ஈரோடு ஊராட்சி ஒன்றியம் 6 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. எலவமலை, மேட்டுநாசுவம்பாளை யம், கதிரம்பட்டி, பேரோடு, பிச்சாண்டம் பாளையம் மற்றும் கூரபாளையம் ஆகிய கிராமங்களடங்கிய ஒன்றியத் தில் சுமார் 78 குடியிருப்புகள் உள் ளன. இக்கிராமங்கள் விவசாயமும் நிறைந்த பகுதியாகும். ஆனால் அவற் றில் 3, 4 மாதங்கள் மட்டுமே வேலை கிடைக்கும். ஆகவே விவசாயத்தை நம் பியுள்ள தொழிலாளர்கள் ஆண்டின் எஞ்சிய மாதங்களுக்கு கிராமப்புற வேலை உறுதி திட்டத்தையே நம்பி உள் ளனர். இந்நிலையில் மேற்கண்ட கிராமங் கள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட் டால் 100 நாள் வேலை திட்டம் ரத்தா கும் வாய்ப்புள்ளது. கிராம ஊராட்சிக ளாக நீடித்தால் மட்டுமே விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாது காக்கப்படும். எனவே, அவற்றை மாநக ராட்சியுடன் இணைக்கும் முடிவைக் கைவிடுமாறு தெரிவித்துள்ளார்.