districts

img

மக்கள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் செப்16- திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் த.ஆனந்த் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 270 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர். பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.  அதனைத்தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் கருணை அடிப்படையில் 2 நபர்களுக்கு பணிநியமன ஆணையை ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில்; மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் ஜெயதீபன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பூஸ்ஷணகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சந்திரமோகன் உள்பட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;