அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, அக்.23- தெலுங்கானா போக்குவரத்து தொழிலாளர்களின் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் கோரிக்கையை நிறை வேற்ற வலியுறுத்தியும் அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கழகத்தை அரசே ஏற்று நடத்தவேண்டும்.போக்குவரத்து கழகத்தில் பணி யாற்றும் ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தெலுங்கானா போக்குவரத்து கழக தொழிலா ளர்கள் அக்.5ஆம் தேதிமுதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலை யில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் போராடும் தொழிலா ளர்களை அழைத்துப் பேசி சுமூக தீர்வுகாண்பதற்கு பதிலாக, 48 ஆயிரம் போக்குவரத்து கழக தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளார். முதல்வரின் இந்த நடவடிக்கையால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.எனவே தெலுங்கானா அரசு போராடும் தொழிலாளர்களை அழைத்து பேசி சுமூக தீர்வுகாண வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க தருமபுரி மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஜி.பழனியம் மாள் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புகழேந்தி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் பி.எஸ்.இளவேனில்,ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் என்.ராமஜெயம், மாவட்டத் தலைவர் ஆர்.ருத்ரையன்,தமிழ் நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் சி.எம்.நெடுஞ் செழியன், மாவட்டச்செயலாளர் சி.காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.