உதகை, அக்.12- மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, பிரியதர்ஷினி தலைமை ஏற் றார். மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றிறனார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மக் களைத் தேடி மருத்துவ ஊழியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். குறைந்த பட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் வழங்கிட வேண்டும். ஊக்கத்தொகை ரூ.2 ஆயிரத்தை கால தாமத மின்றி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட முழக்கங்கள் எழுப் பினர். ஆர்ப்பாட்டத்தில், நீலகிரி மாவட்ட சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.வினோத், மாவட்டப் பொருளாளர் ஏ.நவீன் சந்திரன், எம்டிஎம் மாநிலச் செயலாளர் டி.லட்சுமி, மகா லட்சுமி, ஆஷா ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் சீதா லட்சுமி உள்ளிட்டோர் உரையாற்றினர். முடிவில், எம்டிஎம் மாவட்டப் பொருளாளர் இந்துமதி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியர் மு.அருணாவிடம் அளித்தனர்.