திருப்பூர், அக். 9 - தமிழக அரசு அறிவித்த ரூ.2ஆயிரம் ஊக் கத் தொகையை அனைத்து மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்களுக்கும் வழங்க வலியு றுத்தி திருப்பூரில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திங்களன்று காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.மகாலட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ஜெயலட்சுமி, மாவட்டப் பொருளாளர் எஸ்.பானுப்பிரியா, மாவட்டத் துணைத் தலைவர் டெய்சி ராணி உள்பட பெருந்திர ளான மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் பங்கேற்றனர். தன்னார்வலர்கள் என்று சொல்லி மக் களைத் தேடி மருத்துவ ஊழியர்களுக்கு அதிக பணிப்பளுவைக் கொடுத்து குறை வான ஊதியம் கொடுப்பதைக் கண்டித்தும், மகளிர் திட்டம் மூலம் ஊதியம் வழங்குவதை மாற்றி நேரடியாக ஊழியர்களின் வங்கி்க் கணக்கில் ஊதியம் வழங்க வலியுறுத்தியும், பணி மறுக்கப்பட்ட ஊழியர்களுக்கு உடனடி யாக ஊதியம் வழங்க வலியுறுத்தியும், சுகா தாரத் துறை அதிகாரிகள், சங்க நிர்வாகிக ளுடன் கோரிக்கை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும் முழுக்கங்கள் எழுப் பப்பட்டன. கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாவட்டத் தலைவர் சி.மூர்த்தி, மாநிலத் தலை வர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உரை யாற்றினர். சிஐடியு சாலையோர வியாபாரி கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.பாலன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலா ளர் எஸ்.சிவராமன் ஆகியோர் பங்கேற்ற னர். தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டம் திங்க ளன்று நடத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவை யில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் மக்க ளைத் தேடி மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை கள் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வர இருப்பதாகவும் மாநிலத் தலைவர் எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நிறைவாக பானுப்பிரியா நன்றி கூறினார்.