தருமபுரி, ஜன.30- மக்களை தேடி மருத்துவ பெண் சுகாதார தன்னார்வலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண் டும் என சிஐடியு மக்களை தேடி மருத்துவம் பெண் சுகாதார தன்னார் வலர்கள் சங்கத்தின் மாவட்ட அமைப் புக்குழு வலியுறுத்தியுள்ளது. தருமபுரி சிஐடியு அலுவலகத் தில் சிஐடியு மக்களை தேடி மருத்து வம் பெண் சுகாதார தன்னார்வலர் கள் சங்கத்தின் முதல் அமைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் சி.அங்கம்மாள் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் பி.ஜீவா, மாவட்டக்குழு உறுப்பினர் பி.ஜீவா ஆகியோர் சிறப்புரையாற்றினர். மக் களை தேடி மருத்துவம் பெண் சுகா தார தன்னார்வலர்கள் சங்கத்தின், மாநில துணைத்தலைவர் பாலாம் பிகா, சேலம் மாவட்ட நிர்வாகி செந் தமிழ் செல்வி ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். இதில், மக்களை தேடி மருத்து வம் பெண் சுகாதார தன்னார்வலர் களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு வங்கியில் ஊதியத்தை செலுத்த வேண்டும். ஊழியர்களுக்கு வேலை பளுவை திணிக்கக்கூடாது. வேலை நேரத்தை வரையறுக்க வேண்டும். அதிகாரிகள் அச்சுறுத்தலின்றி, தன் னார்வலர்களை கண்ணியமாக நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் முதல் அமைப்புக்குழு கூட்டத்தில் மாவட்ட தலைவராக சி.அங்கம் மாள், மாவட்ட செயலாளராக வி.விஜ யலட்சுமி, பொருளாளராக பி.சசி கலா மற்றும் துணைத்தலைவர்கள், துணைச்செயலாளர்கள் தேர்வு செய் யப்பட்டனர்.