districts

img

அரசின் திட்டங்கள் விரைந்து கிடைக்க நடவடிக்கை - கண்காணிப்பு அலுவலர்

தருமபுரி, அக்.29- அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டுமென தருமபுரி மாவட்ட கண் காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர்  கி.சாந்தி முன்னிலை வகித் தார். அரசு முதன்மை செயலாளர், தொழிலாளர் நல ஆணை யர், தருமபுரி மாவட்ட கண்கணிப்பு அலுவலர்  முனைவர் அதுல் ஆனந்த்  தலைமையேற்று, தருமபுரி  மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு துறை வாரியாக தனித் தனியாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் பேசும் போது, அரசின் திட்டங்கள் தகுதியான நபர்களுக்கு கிடைப் பதை ஒவ்வொரு துறை அலுவலர்களும் உறுதி செய்திட வேண்டும். மேலும், அரசுத்துறைகளின் மூலம் அளிக்கப் பட்டு வருகின்ற சேவைகள் அனைத்தும் உடனுக்குடன் மக்க ளுக்கு கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். இ-சேவை மையங்களில் வழங்கப்படுகின்ற அனைத்து சேவைகளும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காலதாமதமின்றி உட னுக்குடன் மக்களுக்கு கிடைத்திட துரித நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பாபு  உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.