districts

img

திருப்பூர் பாதாள சாக்கடை பணியை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை

திருப்பூர், மார்ச் 7-  திருப்பூர் மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து முழு மையான ஆய்வு மேற்கொண்டு பின்பு விரைந்து செயல்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 51 ஆவது வார்டு தென்னம்பாளையம் டி.எம்.சி. காலனி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் தூர்வா ரும் பணிகளை திங்களன்று திருப்பூர் மாநக ராட்சி மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மண்டலத்தில் நகர்ப் புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள னர். மண்டலம் முழுவதும் பசுமையாகவும், தூய்மையாகவும் வைப்பதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. அவர்கள் பணி இன்று தொடங் கப்பட்டு இருக்கிறது என்று தெரி வித்தார்.  மேலும், திருப்பூர் மாநகராட்சி முழு வதும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து முழுமையான ஆய்வு மேற் கொண்டு வருவதாகவும், ஆய்வுக்குப் பின் பணிகள் துரிதப்படுத்தப்படும் எனவும் தெரி வித்தார். திருப்பூர் மாநகராட்சி முழுவதும் தார்சாலை வசதி மற்றும் குடிநீர் பிரச்ச னைகளை போர்க்கால அடிப்படையில் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். இந் நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநக ராட்சி ஆணையாளர் கிராந்தி குமார்பாடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.