districts

img

திருப்பூர் மாநகர வளர்ச்சிப் பணிகள் மேயர் ஆய்வு

திருப்பூர், மார்ச் 19- திருப்பூர் மாநகராட்சியில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாநகர மேயர் என்.தினேஷ்குமார் சனி யன்று ஆய்வு செய்தார். திருப்பூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில்  திருப்பூர் மாநகரில் மேற்கொள்ளப் பட்டு வரும் சீர்மிகு நகரத் திட்டம், பசுமை வழி பூங்கா, குடிநீர் வழங் கல் மேம்பாடு, மேற்கூரை சோலார் அமைத்தல், திடக்கழிவு மேலாண்மை, தெரு விளக்குகள், எல்இடி தெரு விளக்குகள், மேற் கூரை சூரிய ஒளி மின்சாரம் அமைத் தல், மீன் அங்காடி, சாலைப் பணி கள், குடிநீர் திட்டப் பணிகள் உள் ளிட்ட பல்வேறு பணிகளை அவர் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் மாநகர பொறியாளர் (பொறுப்பு) முகமது சபியுல்லா, மாநகர நல அலுவலர் பிரதீப் வி.கிருஷ்ண குமார் மற்றும் உதவி ஆணையர் கள், மண்டல உதவி ஆணையர்கள் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர். சாலைப் பணி, தடுப்பூசி முகாம் ஆய்வு இதைத் தொடர்ந்து மேயர் தினேஷ்குமார் கண்ணகி நகர் மற் றும் எம்.எஸ்.நகர் சந்திப்பு பகுதி யில் நடைபெற்று வரும் சாலை பணி களை ஆய்வு செய்தார். முன்னதாக 19ஆவது வார்டு திருநீலகண்ட புரம் மாநகராட்சி பள்ளியில் நடை பெற்ற 25ஆவது மாபெரும் தடுப்பூசி முகாமினை மேயர் தினேஷ்குமார், ஆணையர் கிராந்தி குமார் பாடி  ஆகியோர் நேரில் பார்வையிட்ட னர். 19ஆவது வார்டு மாமன்ற உறுப் பினர் லதா மோகன் மற்றும் மாநகர நல அலுவலர் பிரதீப் வி.கிருஷ்ண குமார், மாநகராட்சி அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உட் பட பலர் கலந்து கொண்டனர்.