திருப்பூர், ஏப். 11 – ஏப்ரல் மாதத்திற்குள் திருப்பூர் மாநகரில் குடிநீர் பிரச்சனை தீரும். குறுகிய நாட்கள் இடைவெளியில் அனைவருக்கும் குடிநீர் வழங்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் கூறினார். திருப்பூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், தற்போது நகரில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மேயர் தினேஷ்குமார் நான்கா வது குடிநீர் திட்டம் சோதனை அடிப்படையில் வடக்குப் பகுதியில் இருந்து தெற்குப் பகு திக்கு மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது, மூன்றாவது குடிநீர் திட்டத்துடன் நான்காவது குடிநீர் திட்டத்தில் கூடுதலாக 50 எம்எல்டி தண்ணீர் கிடைக்கிறது. இதையும் சேர்த்தால் மூன்றில் ஒரு பங்கு குடிநீர் கூடுதலாகக் கிடைக்கிறது. சோதனை ஓட்டம் முடிந்து ஏப் ரல் மாதத்திற்குள் அனைவருக்கும் குடிநீர் வழங்கப்படும். பத்து பனிரெண்டு நாட்கள் இடைவெளி என்பது குறைந்து, ஐந்தாறு நாட் களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்கும். அத்து டன் 18 குடிநீர் வாகனங்கள் தயாராக இருக் கின்றன. தேவைப்படுவோருக்கு ஓரிரு மணி நேரத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றார். நிதி நிலை அறிக்கை குறித்து கவுன்சி லர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மேயர் ந. தினேஷ்குமார் பதில் கூறுகையில், வார்டுக ளுக்கு கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.9 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில் ரூ.13 கோடியே 75 லட்சம் ஒதுக்கப்பட்டுள் ளது. அம்மா உணவகத்துக்கு கடந்த பட்ஜெட் டில் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டது, இந்த பட்ஜெட்டில் ரூ.3.65 கோடி ஒதுக்கப்பட்டுள் ளது. குப்பை வரி பிரச்சனை குறித்து மறு ஆய் வுக்கு உட்படுத்தப்படும். தனியார் நிறுவனம் மூலம் உரிய புள்ளிவிபரம் தகவல்களைத் திரட்டி இது குறித்து ஆய்வு செய்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சீரமைக்கப் படும். மாநகரில் 25 பள்ளிகளில் 49 வகுப்பறை கள் கட்டப்படும். இத்துடன் நமக்கு நாமே திட் டத்தில் 75 வகுப்பறைகள் கட்டிக் கொடுக்கப் படும்.
பட்ஜெட் குறித்து அதிமுகவினர் தங்கள் கருத்துகளை கூறிவிட்டு வெளிநடப்பு செய்வ தாக சொல்லி வெளியேறினர். எழுப்பிய கேள் விகளுக்கு பதில் அளிப்பதாகவும், திருப்தி இல்லாவிட்டால் வெளியேறலாம். முன்கூட் டியே திட்டமிட்டு வெளிநடப்பு செய்வது சரி யல்ல என்று மேயர் கூறினார். சிறிது நேரம் நின் றிருந்த அதிமுக கவுன்சிலர்கள், அதிமுக ஆட்சிக் காலத்தில் சொத்துவரி உயர்த்தப்பட் டது என்று கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறிய வுடன் கூச்சல் எழுப்பினர். இதன்பின் அங்கி ருந்து வெளியேறினர். மன்றத்தின் மரபை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட அதி முகவினர் செயலுக்கு மேயர் கடும் கண்ட னம் தெரிவித்தார். சொத்து வரி பிரச்சனை குறித்து பேசும் போது, தனியார் மருத்துவமனை ஒன்று 15 ஆயிரம் சதுர அடியில் செயல்படுகிறது. ஆனால், வெறும் 100 சதுர அடி எனக் காட்டி குறைவான வரி செலுத்துகின்றனர். லட்சுமிந கரில் பிரபல தொழிற்சாலை 45 ஆயிரம் சதுர அடியில் இயங்குகிறது. ஆனால் 1500 சதுர அடி என வரி செலுத்துகின்றனர். இது போல் உரிய வரி செலுத்தாததால் 307 சதவிகிதம் வரி வருவாய் வித்தியாசம் உள்ளது. இது போன்ற நிறுவனங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் சென்னைக்கு அடுத்தபடியாக ரூ. 500 கோடி வரை வரி வருவாய் திருப்பூர் மாந கராட்சிக்கு கிடைக்கும் என்றும் மேயர் கூறி னார்.
பூ மார்க்கெட் ஏலம் விடப்பட்டது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர் ஆர். மணிமேகலை ஆட்சேபம் தெரிவித்து, ஏற்கெ னவே இங்கு கடை நடத்தியவர்களுக்கு முன் னுரிமை அடிப்படையில் குறைந்த வாடகை யில் கடை வழங்க வேண்டும் என்றார். மேலும் பேருந்து நிலையம் எதிரே மேம்பாலத்திற்கு கீழே இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு வாடகை விதிப்பதற்கு ஏற்கெனவே மார்க் சிஸ்ட் கட்சி ஆட்சேபனை தெரிவித்திருந்தது. அதை மீண்டும் தீர்மானமாக கொண்டு வந்தி ருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மணிமேகலை வலியுறுத்தினார். புதிதாகக் கட்டப்பட்டுள்ள பூ மார்க்கெட் வளாகத்தில், ஏற்கெனவே பூக்கடை நடத்தி யவர்களுக்கு, ஏலதாரரிடம் பேசி முன்னு ரிமை அடிப்படையில் கடை வழங்கலாம் என்று மேயர் தெரிவித்தார். பெண் கவுன்சிலர்கள் பேசுவதற்கு உரிய வாய்ப்புத் தர வேண்டும் என்று மதிமுக கவுன் சிலர் சாந்தாமணி கூறினார். இதே கூட்டத்தில், இந்த நிதியாண்டுக் கான முதல் கூட்டம் என்ற முறையில் ஏப்ரல் மாதத்திற்கான அஜெண்டா முன்வைக்கப்பட் டது. இதில் முதல் தீர்மானமாக, பளிளிகளில் காலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற் காக, அனுப்பர்பாளையம் அரசினர் மேல் நிலைப் பள்ளி, சின்னச்சாமியம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி, விஜயாபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி, முருகம்பாளையம் மாந கராட்சி நடுநிலைப்பள்ளி வளாகங்களில் சமையல் கூடம் கட்டுவதற்கு தேர்வு செய்யப் பட்டன.