districts

img

பள்ளி கட்டுமான பணிகள்: மேயர் ஆய்வு

திருப்பூர், டிச.8- திருப்பூரில் மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள் ளியில் நடைபெற்று வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டுமான பணியை மாநகராட்சி மேயர் நா.தினேஷ் குமார் நேரில் ஆய்வு  மேற்கொண்டார். திருப்பூர் ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஜெய்வா பாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 3 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவிகளின் பயன்பாட்டிற்காக பள்ளி வளாகத்தில் கூடுதல்  வகுப்பறைகள் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.  நடை பெற்று வரும் கட்டுமானப்பணிகளை மாநகராட்சி மேயர் நா.  தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி துணை மேயர் பாலசுப்பி ரமணியம் உள்ளிட்டோர் வெள்ளியன்று நேரில் ஆய்வு மேற் கொண்டு ஆலோசனை நடத்தினர். 2024 ஆம் கல்வி ஆண்டிற் குள் பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வலி யுறுத்தினர்.  இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு தேவையான கூடு தல் வசதிகள் குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்ட றிந்தனர். மேலும் பள்ளியில் பயின்று மாநில அளவிலான  விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிக ளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.