திருப்பூர், மார்ச் 26 - மாவீரன் பகத்சிங் 92-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் திருப்பூர் வடக்கு மாநகரம் குலாம் காதர் லே - அவுட் கிளையின் சார்பில் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 128 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, 7 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.குலாம் காதர் லே - அவுட் கிளை நிர்வாகி பூபாலன் தலைமை யில் சுமித் நர்சரி பள்ளியில் இம்முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.மணிகண்டன் துவக்கி வைத்தார். வடக்கு மாநகர தலைவர் கண்ணன், மாநகரச் செயலாளர் விவேக் மற்றும் கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள், குலாம் காதர் லே - அவுட் கிளை ஊழியர்கள் தமிழரசன், சந்துரு, நித்திஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.