திருப்பூர், மார்ச் 4 - சமையல் எரிவாயு உருளை விலையை ரூ.50 உயர்த்தியுள்ள ஒன் றிய அரசைக் கண்டித்து அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒப்பா ரிப் போராட்டம் நடத்தினர். திருப்பூர் தெற்கு ஒன்றியம் மாதர் சங்கம் சார்பில் வீரபாண்டி அருகே கல் லாங்காட்டில் வெள்ளிக்கிழமை மாலை இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் 55 பெண்கள் கலந்து கொண்டு சமை யல் எரிவாயு உருளையை வைத்து ஒப் பாரி வைத்து ஒன்றிய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர். ஒன்றிய நிர்வா கிகள் லட்சுமி, பாக்கியம் உள்ளிட்டோர் ஒன்றிய அரசைக் கண்டித்து உரையாற் றினர். வாவிபாளையத்தில் ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியம் நெருப்பெ ரிச்சல் பகுதி கிளைகள் சார்பில் வாவிபா ளையம் பகுதியில் கடந்த வியாழனன்று ஒன்றிய அரசைக் கண்டித்து ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குருவாயூரப் பன் நகர் கிளைச் செயலாளர் எம்.சந்தி ரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத் தில் மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகா மணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி. மகாலிங்கம், எஸ்.பானுமதி, கிளை செயலாளர்கள் எம்.தன்ராஜ், இ.மங்க லக்ஷ்மி, சிஐடியு நிர்வாகி சி.ராஜன் மற்றும் கட்சி அணியினர் பங்கேற்ற னர்.