districts

img

நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகிக்க கோரி மாதர், வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.28- தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் அத்தி யாவசிய உணவுப் பொருட் களை நியாய விலைக் கடை  மூலம் விநியோகம் செய்ய  வலியுறுத்தி திருப்பூரில் மாதர் வாலிபர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  திருப்பூர் ஒன்றியம், கால்லாங்காடு நியாய விலைக்கடை முன்பு திங்களன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற் றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்  இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டாத் திற்கு பாக்கியம் தலைமை வகித்தார். இதில்,  விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  பெட்ரோல், டீசல்,  எரிவாயு விலைகளை குறைப்பதுடன், அத்தி யாவசிய உணவுப் பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் அனைத்து மக்க ளுக்கும் நியாயமான விலையில் வழங்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும், என முழக் கங்கள் எழுப்பப்பட்டன.  இதில், மாதர் சங்க செயலாளர் பா.லட் சுமி, வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜி. சிந்தன், முன்னாள் வாலிபர் சங்க தலைவர் கள் சண்முகம், ரவிச்சந்திரன், முத்துச்சாமி மற்றும் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.