திருப்பூர், ஜூலை 24- கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திருப் பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அரசு சமையல் எரி வாயு விலையை உயர்த்தி யுள்ளதைக் கண்டித்து திருப்பூர் முதலிபா ளையம் சிட்கோ தொழிற்பேட்டை அருகில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்துக்கு மாதர் சங்க திருப்பூர் தெற்கு ஒன்றியத் தலைவர் எஸ்.ஜானகி தலைமை தாங்கி உரையாற்றினார். மாதர் சங்க கிளைச் செயலாளர்கள் தேவி, ஜானகி உள்பட பெண்கள் கலந்து கொண்டனர். முன் னதாக ஒன்றிய அரசின் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து எரி வாயு சிலிண்டருக்கு பாடை கட்டி, மாலை அணிவித்து பெண்கள் கண்டன முழக்கம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.