திருப்பூர், டிச. 9 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அமைப்பு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங் களில் கொடியேற்று விழாக்கள் நடத்தப்பட்டன. ஊத்துக்குளி தாலுக்கா பாப்பம்பாளையம் கிளை, ஊத் துக்குளி ஆர்.எஸ்.கிளை, பல்லகவுண்டன்பாளையம் கிளை, அவிநாசி ஒன்றியம் பாரதி நகர் கிளை, 15 வேலம்பாளையம் நக ரக்குழு உள்ளிட்ட பகுதிகளில் இந்த கொடியேற்று விழாக் கள் நடைபெற்றன. அந்தந்த பகுதிகளில் மாதர் சங்க நிர்வா கிகள் உள்ளிட்ட பெண்கள் பங்கேற்று கொடியேற்றினர். மாதர் சங்க மாவட்டச் செயலாளர் கு.சரஸ்வதி இதைத் தெரிவித் தார்.