districts

img

நூண் நிதி நிறுவனங்களின் அடாவடி வட்டி வசூல் மாதர் சங்க மாநாடு கண்டனம்

ஈரோடு, ஜூலை 17- நுண்நிதி நிறுவனங்க ளின் அடாவடித்தனமான வட்டி வசூலை தடுத்து நிறுத்த வேண்டும் என  அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க  கோபி தாலுக்கா மாநாடு சனியன்று  நடைபெற் றது. துணை தலைவர் பி.கிருஷ்ணவேணி  தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கி வைத்து மாதர் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் பா.லலிதா உரையாற்றினர். இந்திய ஜனநா யக வாலிபர் சங்க நிர்வாகி எஸ்.யுவராஜ் வாழ்த்தி உரையாற்றினார்.  இதில், பெண்கள் குழந்தைகள் மீதான  வன்முறைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.  அரசு அலுவலகங்களில் விசாகா கமிட்டி  அமைக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகளில்  புகார் கமிட்டி அமைக்க வேண்டும்.  100 நாள்  வேலை திட்டத்தை மாநகராட்சி, நகராட்சி மற் றும் பேரூராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். நுண் நிதி நிறுவனங்கள் பெண் களிடம் அத்துமீறி அடாவடித்தனமாக வட்டி  வசூல் செய்யப்படுகிறது. தமிழக அரசு உடன டியாக இதனை தடுத்து நிறுத்த வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனை, வீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தாலுக்கா கமிட்டியின் தலைவராக எ. முத்தாயம்மாள், செயலாளராக மல்லிகா. பொருளாளராக பி.கிருஷ்ணவேணி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட செய லாளர் பி.எஸ்.பிரசன்னா நிறைவுரையாற்றி னார்.