districts

img

பாஜக எம்பி.,யை கைது செய் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஏப்.29- மல்யுத்த வீராங்கனைகள் மீதான பாலி யல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பாஜக எம்பி.,யை கைது செய்ய வலியுறுத்தி தரும புரியில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய மல்யுத்த வீராங்கனை சம்மேள  தலைவராக பொறுப்பில் இருக்கும் பாஜக  எம்பி பிரிஜ் புஷன் சரண்சிங், வீராங்கனை களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்ப வத்தை தொடர்ந்து புகார் கொடுத்தும், அமித்சா தலைமையிலான தில்லி போலீஸ்  இதுவரை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதிவு செய்ய மறுத்து வருகிறது. இதனை யடுத்து, இந்த போராட்டத்திற்கு ஆதரவா கவும், பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பாஜக எம்பி.,யை கைதுசெய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் தருமபுரி தொலைபேசி நிலையம் முனபு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜெயா  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா, ஒன்றிய செயலாளர் எம்.மீனாட்சி, நகர  தலைவர் சுபா உள்ளிட்டோர் உரையாற் றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.  ஈரோடு இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு எஸ்கேசி சாலையில் சனியன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் எஸ்.சுப்ரமணியன் தலைமை ஏற்றார். இதில், மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம், தவிச மாவட்ட தலைவர் எஸ்.வி.மாரிமுத்து, செய லாளர் ஏ.எம்.முனுசாமி,  தீஒமு மாவட்ட தலைவர் பி.பி.பழனிசாமி, விதொச மாவட்ட  தலைவர் கே.ஆர்.விஜயராகவன், மாதர் சங்க  மாவட்ட செயலாளர் பா.லலிதா, மாணவர் சங்க நிர்வாகி விக்னேஷ் உள்ளிட்டோர் உரை யாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற் றனர்.