districts

img

காதலர் தின கொண்டாட்டம்

நாமக்கல், பிப்.15- எலச்சிபாளையம் காதலர் தினத்தை முன்னிட்டு மாதர் சங்கம் சார்பில் கேக் வெட்டி, சிவப்பு ரோஜாக்கள் கொடுத்து கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் , திருச்செங்கோடு அருகே, எலச்சி பாளையம் சங்க அலுவலகத்தில், காதலர் தினத்தை முன் னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், எலச்சி பாளையம் மல்லசமுத்திரம் ஒன்றியக்குழு சார்பில் மாவட்ட துணைத்தலைவர் ஜி.பழனியம்மாள் தலைமையில் காத லர் தின விழா நடைபெற்றது. இதில் மாதர் சங்கத்தின் நிர்வாகி கள் சாந்தி, மோகனப்பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். சாதி மறுப்பு கலப்புத் திருமணம் செய்த தம்பதியர் களை கௌரவித்து கேக் வெட்டி சிவப்பு ரோஜாக்கள் பூங் கொத்துகள் கொடுத்து கொண்டாடப்பட்டது.