உடுமலை, மார்ச் 16 - போதை காலச்சாரத்தை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூட வேண்டும் என்று சர்வதேச மக ளிர் தினக் கருத்தரங்கில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தினர். உடுமலை மாதர் சங்க அலுவகத்தில் சர்வதேச மகளிர் தின கரத்தரங்கம் 16 ஆம் தேதி வியாழனன்று உடுமலை நகரத் தலைவர் சுமதி தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங் கில் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், தேர்தல் வாக்குறுதிப்படி பெண்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும், ஊராக வேலை திட்டத் தின் வேலை நாட்களை உயர்த்தி தர வேண்டும். குழந்தை திருமணத்தை தடுக்க சிறப்பு குழுக்களை அமைக்க வேண் டும். ரேசன் கடைகளில் பயோமெட்ரிக் முறையை கைவிட வேண்டும். காரணம் இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்ட முதி யோர் மற்றும் விதவைகளுக்கு வழங்கி வந்த உதவி தொகையை நிறுத்தியதை மீண்டும் தர வேண்டும். மாற்றுத் திறனாளி பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் உதவி தொகை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் வலியுறுத்தப் பட்டது. இந்த கருந்தரங்கில் மாவட்ட செயலாளர் கு.சரஸ்வதி, மாவட்டப் பொருளாளர் ஆர்.கவிதா, குடிமங்கலம் கமிட்டி துணை செலாளர் என்.சசிகலா, மடத்துக்குளம் கமிட்டி செய லாளர் ராதா, உடுமலை கமிட்டி செயலளர் சித்ரா, குடிமங்க லம் கமிட்டி கலைவாணி, மற்றும் முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் வசந்தி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர்.