திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலிருந்தும் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் “பெருந்திரள் வாசிப்பு இயக்கம்” செவ்வாயன்று தொடங்கியது. திருப்பூர் ஜெய்வாபாய்பள்ளியில் வாசிப்பு இயக்கத்தை வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் குழுவினர் தொடக்கி வைத்தனர்.