districts

img

மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி வழங்கக்கோரி நாடு முழுவதும் வெகுஜன அமைப்புகள் போராட்டம்

புதுதில்லி, மே 20- இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் சில அதிகாரிகளைக் கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மல்யுத்த வீராங் கனைகள் தலைநகர் தில்லியில் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவாக வெகுஜன அமைப்புகளின் சார்பில்  கிளர்ச்சிப் போராட்டங்கள் நாடு முழு வதும் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஜு கிருஷ்ணன் மற்றும்  தலைவர் அசோக் தாவ்லே ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்திட்ட நம் மல்யுத்த வீராங்கனை கள், தங்களுக்கு பாலியல் துன்புறுத்தல் களில் ஈடுபட்ட பாஜக எம்.பி.யும், இந் திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன் சரணை கைது செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியு றுத்தி புதுதில்லி, நாடாளுமன்ற வீதி யில் மேற்கொண்டுவரும் அறப் போராட்டம் ஒட்டுமொத்த நாட்டின் கவ னத்தையும் ஈர்த்துள்ளது. நாடு முழு வதும் இதற்கு ஆதரவு தெரிவித்து  

பல்வேறு அமைப்புகள் தன்னெழுச்சி யாகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. எனினும் குற்ற மிழைத்த கயவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் இதுவரை பாஜகவின் ஒன்றிய அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை மேலும் கூர்மைப் படுத்தும் விதத்தில் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆகியவற்றின் சார்பில் மே 18 வியாழனன்று நாடு முழுவதும் மேற் படி பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரு மான பிரிஜ் பூஷன் சரண் மற்றும் சந்தீப் சிங் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அறைகூவல் விடுத்தன. இதன் அடிப்படையில் நாடு முழுவதும் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடந்துள்ளன. மேற்குவங்கம், அசாம், திரிபுரா, ஒடிசா, உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா, குஜராத், ராஜஸ்தான், தெலுங்கானா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. தில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்தில் ஹன்னன்முல்லா (விவசாயிகள் சங்கம்), மைமூனா முல்லா மற்றும் ஆஷா ஷர்மா (மாதர் சங்கம்), வி.சிவ தாசன் (மாநிலங்களவை உறுப்பினர், சிபிஎம்), விக்ரம் சிங் (விவசாயத் தொழி லாளர் சங்கம்), திப்சிதா தார் (மாணவர் சங்கம்) மற்றும் சிலர் கண்டன உரையாற்றினர்.        (ந.நி.)