districts

img

மார்க்சிஸ்ட் கட்சி பயிற்சி வகுப்பு

திருப்பூர், ஜூன் 25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  திருப்பூர் மாவட்டக்குழு உறுப்பினர் களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் ஞாயிறன்று தொடங்கியது. ஜுன் 25,26 இரண்டு நாட்கள் உடு மலையை அடுத்து கேரள மாநிலம், மறையூர்  நாச்சிவயல் மண்டபத்தில் பயிற்சி முகாம்  நடைபெறுகிறது. முதல் நாள் பயிற்சி வகுப்பு  கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் கி. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. “திராவிட இயக்க வரலாறு” என்ற தலைப் பில் கட்சியின் மாநிலக்கல்விக் குழு சார்பில்  மாநில செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன் விரிவாக வகுப்பு நடத்தினார்.  முன்னதாக, கட்சியின் மறையூர் ஏரியா  கமிட்டி உறுப்பினர் எஸ்.சந்திரன் வர வேற்றார். இதில் மாவட்டச் செயலாளர்  செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப் பினர் கே.காமராஜ், மாவட்டக்குழு உறுப்பி னர்கள், இடைக் குழு செயலாளர்கள் உள் ளிட்டோர் பங்கேற்றனர். மாலையில் “ஏகாதி பத்திய நெருக்கடியும், சோசலிசமும்” என்ற  தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பி. ராஜேந்திரன் உரையாற்றினார். இரண் டாவது நாளில், இடதுசாரி ஜனநாயக அணி குறித்து கட்சியின் மத்தியக் குழு உறுப் பினர் பி.சம்பத் பங்கேற்க இருக்கிறார். இந்த பயிற்சி முகாமுக்கான ஏற்பாடு களுக்கு மறையூர் கட்சி ஊழியர்கள் உதவி  செய்தனர்.