சேலம் ஜூன் 24- நீட் தேர்வு ரத்து செய்ய வலியு றுத்தி சேலம் கோட்டை மைதானத் தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண் டும். ஊழல் முறைகேடுகள் நிறைந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சேலம் கோட்டை மைதா னத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கட்சியின் மாவட்டச் செயலா ளர் மேவை சண்முகராஜா ஆர்ப்பாட் டத்திற்கு தலைமை வகித்தார். இதில் கிழக்கு மாநகரச் செயலா ளர் பொன்.ரமணி, மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார், சேலம் தாலுகா செயலாளர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கட பதி எம்.குணசேகரன், ஐ.ஞான சௌந்தரி, ஏ.ராமமூர்த்தி, மேட்டூர் கொளத்தூர் செயலாளர் எஸ்.வசந்தி, நங்கவள்ளி ஒன்றியச் செயலா ளர் கே.ராஜாத்தி, மேச்சேரி ஒன்றிய செயலாளர் மணிமுத்து, ஓமலூர் தாலுகா செயலாளர் ஈஸ்வரன், ஏற் காடு தாலுகா செயலாளர் நேரு மற் றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.