திருப்பூர், ஜூன் 25- ஒன்றிய பாஜக அரசின், அக்னிபாத் ராணுவ ஒப்பந்த முறை திட்டத்தைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடு முழுவதும் கண்டன போராட்டங்களை நடத்தி வருகி றது. அந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக வேலம்பாளை யம் நகரக்குழு சார்பில் அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத் தம் அருகில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெ ற்றது. இதில் நகரக்குழு உறுப்பினர் தோழர் டி.நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.ராஜகோபால், நகர செயலாளர் ச.நந்தகோபால், மூத்த தோழர் வி.பி.சுப்பிர மணியன், வாலிபர் சங்க நகரப் பொருளாளர் எஸ்.ராம்கி, மாதர் சங்க நகரத் துணைத்தலைவர் பி.செல்வி, பாத்திர சங்க செயலாளர் கே.குப்புசாமி ஆகியோர் கண்டன உரை நிகழ்த் தினர். நகரக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.