districts

img

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஏப்.3- பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு அருகே எலச்சி பாளையம் பேருந்து நிறுத்தத்தில் ஒன்றிய அரசை கண்டித்து   இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் மேற்கு ஒன்றிய செய லாளர் கே.எஸ்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் சு.சுரேஷ் கோரிக் கைகளை விளக்கிப் பேசினார்.  இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் பிரதேச அமைப்புக் குழு கன்வீனர்  ந.வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, அமைப்புக்குழு உறுப்பினர்கள் சிவ சந்திரன், செங்கோட்டையன், ஜெய மணி மற்றும்  கு.சிவராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப் பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் நால்ரோடு  பகுதியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கிளை  செயலாளர் பெரு மாள் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர். பள்ளிபாளையம் வடக்கு ஒன்றி யம் வெப்படையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் ஜி.சேகர் தலைமை வகித்தார். இதில், சிஐடியு  பஞ்சாலை சங்க உதவி செய லாளர் பி.சண்முகம் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன் றியக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், கொங்கணா புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்சியின் இடைக்குழு செயலா ளர் எஸ்.முத்துசாமி தலைமை வகித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.சேகர், ஜி.கணபதி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் மு.பெரி யண்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர் .

உதகை

உதகை ஏடிசி திடல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தாலுகா செயலாளர் நவீன் சந்தி ரன், ஸ்டெர்லிங் பயோடெக் பொதுச் செயலாளர் யூ மூர்த்தி,மாவட்ட செயற் குழு உறுப்பினர் சங்கரலிங்கம், ஓய்வு பெற்றொர் போக்குவரத்து தலைவர் ராமன், தாலுகா உறுப்பினர் ராஜ ரத்தினம்  உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.    

திருப்பூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரம் ராயபுரம் ரவுண் டானா பகுதியில் சனியன்று ராய புரம் கிளை செயலாளர் லாரன்ஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இதில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.சுந்தரம், பி.செல்லதுரை, கிளைச் செயலாளர் கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பொங்கலூர் கமிட்டி சக்திநகர் கிளையில் சக்திநகர் கிளை செயலா ளர் ரங்கநாதன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் பாலன், ஒன்றியக்குழு உறுப்பினர் நாட்ராயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பொங்க லூர் மகாஜனபுரம் கிளையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சண்முகம் தலைமை ஏற்றார். இதில் ஒன்றிய செயலாளர் பாலன், மாவட்ட குழு உறுப்பினர் பவித்ராதேவி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திர ளானோர் கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு ஒன்றியம் முதலி பாளையம் சிட்கோ தொழிற்பேட்டை முன்பாக நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு பொன்னாபுரம் கட்சிக் கிளைச் செயலாளர் ஏ.செல்வன் தலைமை தாங்கினார். இதில் முன் னாள் ஒன்றிய கவுன்சிலர் மணி என்கிற முருகசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காந்திமதி மற்றும் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் கள், கிளைச் செயலாளர்கள்  உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் எரிபொருள் இல்லாமல் ஒருவர் இரு சக்கர வாகனத்தை இழுத்துக் கொண்டு செல்வது போலவும், சிலிண் டருக்கு மாலை அணிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். தெற்கு ஒன்றியம் இடுவாய் கிரா மத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் துக்கு இடுவாய் கிளைச் செயலாளர் கருப்புசாமி தலைமை வகித்தார். இதில் கட்சியின் மாவட்டக்குழு உறுப் பினரும், இடுவாய் ஊராட்சிமன்றத் தலைவருமான கே.கணேசன், வாலிபர் சங்க நிர்வாகி ஆறுமுகம் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கேஸ்  விலை உயர்வுக்கு எதிராக கண்டனம் முழங்கினர்.