districts

img

100 நாள் வேலை திட்டத்தில் முறையாக வேலை வழங்கு! பொங்கலூரில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

திருப்பூர், ஜூலை 22- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை  உறுதி திட்டத்தில் முறையாக வேலை வழங் காததை கண்டித்து, பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் போராட் டம் நடைபெற்றது. திங்களன்று நடைபெற்ற இந்த போராட் டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொங்கலூர்  ஒன்றியக்குழு உறுப்பினர் சிவசாமி தலைமை வகித்தார். இதில் ஊரக வேலை  உறுதி திட்டத்தில் கடந்த மூன்று மாதமாக  வேலை வழங்காமல் தொழிலாளர்கள் வஞ் சிக்கப்படுகிறார்கள். இத்தொழிலாளர்க ளுக்கு உடனடியாக வேலை வழங்க வேண் டும். வேலையில்லாத காலத்திற்கு சட்டப்படி  இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.  இந்த தொழிலாளர்களுக்கு சட்டக்கூலி ரூ. 319 முழுமையாக வழங்க வேண்டும்.  கூலியை குறைத்து வழங்கும் நடை முறையை கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட் டத்தில் கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் ஜி.சம்பத், எஸ்.பவித்ரா தேவி, ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஜி.சுந்தரம் ஆகியோர் கோரிக் கைகள் குறித்து பேசினர். இதில் பொங்கலூர்  ஒன்றியத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நூறு நாள் திட்டத்  தொழிலாளர்கள் பங்கேற்றனர்.