திருப்பூர், ஜூன் 28 - காங்கேயம் வட்டம் நத்தக்காடை யூர் பகுதியில் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில் பழைய கோட்டை மின்வாரிய அலு வலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் பழைய கோட்டை துணை மின் நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இந்த ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. நத்தக்காடையூர் ஊராட்சியில் 665 தெரு விளக்குகள், மருதுறை ஊராட்சி யில் 228 தெரு விளக்குகள், பழைய கோட்டை ஊராட்சியில் 489 தெரு விளக் குகள் என மொத்தம் 1200க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் உள்ளன. மேலும் இந்த மூன்று ஊராட்சிகளிலும் வேளாண்மை பயன்பாட்டிற்கான மின் இணைப்புகள் 250 உள்ளன. தெருவி ளக்கு மற்றும் பொது குடிநீர் பயன்பெ றும் மக்கள் தொகை 20 ஆயிரத்திற்கும் மேல் உள்ளனர். 280க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் மின் இணைப்பும் உள்ளன. இப்பகுதியில் இரண்டு ஆரம்ப சுகா தார நிலையங்கள், அரசு மேம்படுத்தப் பட்ட மருத்துவமனை, மூன்று தனியார் மருத்துவமனை போன்றவை இயங்கி வருகின்றன. இத்துடன் செவிலியர் பயிற்சி கல்லூரியும், ஆசிரியர் பயிற்சி நிறுவனமும், ஒரு அரசு கலைக் கல்லூரி யும், ஒரு தனியார் பொறியியல் கல்லூரி யும், 12 அரசு பள்ளிகளும், 7க்கும் மேற் பட்ட நூற்பாலைகளும், 20க்கும் மேற் பட்ட நார் மில்களும், 30க்கும் மேற்பட்ட கயிறு திரிக்கும் நிறுவனங்களும், மூன்று மசாலா தயாரிப்பு நிறுவ னங்களும், பத்துக்கும் மேற்பட்ட எண் ணெய் உற்பத்தி நிறுவனங்களும், ஒரு தனியார் குளிர்பான நிறுவனமும் செயல் பட்டு வருகின்றன. எனவே மேற்கண்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவ னங்கள் மருத்துவமனைகள் இடை யூறு இல்லாமல் செயல்படவும், இதன் மூலம் தொழிலாளர் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் தமி ழக அரசு இந்தப் பகுதிக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என வலி யுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நத்தக்கா டையூர் கிளைச் செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். போராட்டத்தை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கட்சியின் தாலு காக்குழு உறுப்பினர்கள் எம்.கணேசன், எஸ். தங்கவேல் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் சி.செல்லமுத்து ஆகியோர் உரை யாற்றினர். ஆர்ப்பாட்டத்தின முடிவில் மின்வாரிய உதவி செயற்பொறியாள ரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது. நிறைவாக கட்சியின் மூத்த உறுப்பி னர் நடராஜன் நன்றி கூறினார்.